News June 9, 2024

நம்பிக்கையை ஏற்படுத்துமா தேசிய தேர்வு முகமை?

image

நீட் தேர்வு முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 67 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சந்தேகங்களை, கல்வியாளர்கள் எழுப்பி உள்ளார்கள். ஒரே மையத்தில் தேர்வெழுதிய 7 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சந்தேகங்களையும் தீர்த்து, நீட் பாதுகாப்பான தேர்வு என்பதை தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. *உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. *உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. *நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு. *சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

News September 8, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

image

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 8, 2025

உழவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்: அன்புமணி

image

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் வழங்கிய அனுமதியை திரும்ப பெற மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு TN அரசு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது வரை அது ரத்தாகவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உழவர்களுக்கு துரோகம் இழைக்காமல் TN அரசு அந்த அனுமதி ரத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!