News May 19, 2024

மழையால் காய்ச்சல் பரவுகிறதா?

image

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மதுரையில் 3 நாள்களில் 15 சிறார்கள் உட்பட 40 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வார்டுகளை உருவாக்கவும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. .

Similar News

News August 28, 2025

Uncle என விஜய் அழைத்தது சரிதான்.. K.S.ரவிக்குமார்

image

தவெக மாநாட்டில் முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், Uncle என விஜய் அழைத்ததில் தவறில்லை என இயக்குநர் K.S.ரவிக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூட அவரை பார்க்கும்போது ‘வணக்கம் Uncle’ என்றே பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது அரசியல் நாகரிகமற்றது என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.

News August 28, 2025

பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்

image

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. மேலும், மதுரை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், மழையின்போது பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

News August 28, 2025

மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

image

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!