News April 25, 2025
இன்சூரன்ஸில் பயங்கரவாத மரணமும் உள்ளடங்குமா?

‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
Similar News
News April 25, 2025
இந்தியா vs PAK: தொடங்கியதா போர்?

பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, J&K-ல் தீவிரவாதிகளுடனும், பாக். ராணுவத்துடனும் இந்திய ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. LOC-யில் நேற்று இரவு முதல் பாக். துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை தகர்த்த இந்திய ராணுவம், LET தளபதியையும் சுட்டுக் கொன்றது.
News April 25, 2025
11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வு.. கருணை மதிப்பெண்

11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அந்தக் கேள்விக்கு சரியாகவோ, தவறாகவோ எந்தப் பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதாெடர்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
News April 25, 2025
பஹல்காம் எதிரொலி: CM-களுக்கு அமித் ஷாவின் உத்தரவு!

நாட்டில் இருக்கும் அனைத்து CM-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மாநிலத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 200 பேர் இருப்பதாக முன்னரே தகவல் வெளிவந்திருந்தது.