News April 21, 2025
சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

சிஎஸ்கே அணியின் மோசமான சீசன்களில் ஒன்றாக இந்த சீசன் மாறி இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, மீண்டும் தோனி தலைமையேற்ற பிறகும் தடுமாற்றமே நீடிக்கிறது. லீக் சுற்றில் எஞ்சி இருக்கும் 6 போட்டிகளையும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். அதற்கு வாய்ப்பிருக்கா?
Similar News
News December 27, 2025
ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. புதிய அப்டேட்

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 27, 2025
சிலர் விவசாயி வேடம் போட்டு ஏமாற்றுகின்றனர்: CM

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிலர் விவசாயி வேடம் போட்டு, விவசாயிகளையே கொச்சைப்படுத்துவதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் செயல்படுத்திய விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட CM, 20 லட்சம் விவசாயிகளுக்கு ₹1,731 கோடி நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திருவண்ணாமலையில் ₹3 கோடிக்கு சிறப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
News December 27, 2025
ஆஷஸ்: போராடி வெற்றிபெற்ற இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 175 ரன்களை நோக்கி விளையாடிய இங்கிலாந்தின் ஜாக் கிராவ்லி(37), பென் டக்கெட்(34), ஜேகப்(40) ஆகியோர் நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர். முதல் இரு இன்னிங்சில் ஆஸி., 152, 132 ரன்கள் எடுத்திருந்தது. ஏற்கெனவே ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து, இந்த வெற்றியின் மூலம் ஒயிட் வாஷை தவிர்த்துள்ளது.


