News May 13, 2024
இட ஒதுக்கீட்டினால்தான் சாதி வாழ்கிறதா?

2000 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியை ஒழிக்க கொண்டு வரப்பட்டதே இடஒதுக்கீட்டு முறை. ஆனால், சாதியை ஒழிக்க இட ஒதுக்கீட்டையும், சாதி சான்றிதழ்களையும் தூக்கிப் போட வேண்டும் என்று இயக்குநர் பேரரசு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாதியை ஒழிக்க இட ஒதுக்கீடா? இட ஒதுக்கீட்டால் சாதியா? உங்களது கருத்தை கமெண்ட்டில் சொல்லுங்க.
Similar News
News August 6, 2025
தீ விபத்தால் ரத்தானது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் இன்று ஹையாத் நட்சத்திர விடுதியில் தொடங்க இருந்தது. ஆனால் நட்சத்திர விடுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால் செஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ஒரு கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.
News August 6, 2025
மழையில் ஃபோன் நனையாமல் காக்க…

மழையில் உங்கள் ஃபோன் நனையாமல் காக்க, எப்போதும் வாட்டர்புரூப் பவுச் வைத்திருக்கவும் *ஜிப்லாக் பவுச் மற்றும் சிலிகா ஜெல் பாக்கெட்களும் உங்கள் போன் ஈரமாகாமல் காக்கும் *அழைப்புகளை ஏற்க புளூடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தலாம் *மழையில் போனில் ஈரம் புகுந்துவிட்டால், சார்ஜ் போடுவதை கட்டாயம் தவிர்க்கவும் *அரிசிக்குள் (அ) சிலிகா ஜெல் பாக்கெட்கள் கொண்ட ஜிப்லாக் கவரில் ஈரம் உறிஞ்சப்படும் வரை போட்டு வைக்கலாம்.
News August 6, 2025
மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமா, முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வது, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்தும் வலியுறுத்த உள்ளனர்.