News April 30, 2024
கோவிஷீல்டு செலுத்தியோருக்கு இந்த அறிகுறி உள்ளதா?

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய சிலருக்கு த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறி ஏற்படலாம் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரத்தம் உறைவதோடு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News January 28, 2026
வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட இந்து கோவில்!

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் 14 சிலைகள், 20,000 டாக்கா பணம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகிய திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மன்பாரியா நகரில் உள்ள இக்கோவிலில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வரும் நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பு இன்றி அச்சமாக உள்ளதாக கோவில் குருக்கள் தெரிவித்துள்ளனர்.
News January 28, 2026
டி20 WC சாம்பியன் யார்? டிராவிட் கணிப்பு!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி எளிதில் செமி பைனலுக்கு செல்லும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ஆனால் எனது அனுபவத்தில் அடிப்படையில் சொன்னால், அந்தந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அதுவே வெற்றி பெறும். யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் ODI, T20-யில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு ரோகித் ஷர்மாதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
தேர்தல் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் விருதுநகர்!

தமிழக தேர்தல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இம்மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் மறைந்த காமராஜர் முதல்வரானது 1957-ல் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று தான். அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்று தான் முத்துராமலிங்கனார் MP ஆனார். அதேபோன்று 1977-ல் அருப்புக்கோட்டை தொகுதியில் வென்று தான் எம்ஜிஆர் முதல்வராக தேர்வானார்.


