News December 7, 2024

ஆவணங்களை உடனே சரிபார்க்க வேண்டும்: SC

image

மத்திய அரசுப் பணிகளில் சேர்பவர்களது ஆவணங்களை 6 மாத காலத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1985ஆம் ஆண்டு ஒருவர் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று 2010ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஒருவர் பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று SC உத்தரவிட்டது.

Similar News

News March 3, 2026

ஈரானின் உயர் தலைவருக்கான தேர்தலின் போது தாக்குதல்

image

ஈரானின் புதிய தலைமை உருவாகுவதை தடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த உயர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

News March 3, 2026

சந்திர கிரகணத்தால் இந்திய அணியின் பயிற்சியில் தாமதம்

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதிப் போட்டிக்காக இந்திய அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அட்டவணைப்படி, இன்று மாலை 6 – இரவு 9 மணி வரை பயிற்சி நடைபெற இருந்தது. ஆனால் கிரகணம் காரணமாக பயிற்சி இரவு 7 மணிக்கு மேல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கிரகண நேரத்தில் பயிற்சி செய்வது நல்லதல்ல என்று கருதப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

News March 3, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

OPS திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து செஞ்சி வே. ஏழுமலையும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து அவர் மீண்டும் தாய் கழகம் திரும்பியுள்ளார். விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் முக்கிய முகமாக அறியப்படும் ஏழுமலை, அதிமுக சார்பில் MP, MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

error: Content is protected !!