News September 14, 2024

சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

Similar News

News December 10, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான “கபீர் புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்தை காப்பதற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

கடலூர்: வேன் மோதி துடிதுடித்து பலி

image

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கோ.ஆதனூரை சேர்ந்தவர் தொழிலாளி சேகர் (50). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன், சேகர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

image

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.

error: Content is protected !!