News September 14, 2024
சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Similar News
News December 13, 2025
கடலூர்: வயிற்று வலியால் தொழிலாளி விபரீத முடிவு

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் தொழிலாளி எட்வர்ட் பிரான்சிஸ்(55). இவர் வயிற்று வலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் மனமுடைந்த எட்வர்ட் பிரான்சிஸ் நேற்று(டிச.12) காலை 11 மணி அளவில் தனது வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கடலூர்: இலவச மீன் வளர்ப்பு தொழிற்பயிற்சி!

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், மீன் வளர்ப்பு இலவச தொழிற்பயிற்சி வகுப்பிற்கான நேர்காணல் டிச.20-ல் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் காலை மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04142 – 796183 8489949789, 9629752271, 9092493827 என்ற எண்களை தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் மனைவி பானுமதி(53). இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.1.95 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


