News September 14, 2024

சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

image

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் தொடங்கி, பிப்ரவரி மாதம் வரை வாரந்தோறும் சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 28 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் (நவ.30) தெரிவித்துள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான UDID அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

கடலூர்: இளம்பெண் தலை துண்டித்து படுகொலை

image

காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி (35). இவர், தன் கணவரின் தம்பிகள் இருவரும் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் நேற்று (நவ.30) தமிழரசியை தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாரை அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!