News September 14, 2024
சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Similar News
News November 20, 2025
கடலூர்: வழிப்பறி கொள்ளையன் கைது

தூக்கணாம்பாக்கம் அடுத்த கலையூரை சேர்ந்தவர் அருள் மனைவி சித்ரா (49). நேற்று முன்தினம் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சித்ராவின் கழுத்தில் கிடந்த 5 கிராம் நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சித்ராவிடம் நகையை பறித்த விழுப்புரம் மாவட்டம் வி.அகரத்தை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 20, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!
News November 20, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!


