News September 14, 2024
சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
புத்தூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

புத்தூர் அடுத்த சின்னமணல்மேடு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயா(40) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மீது விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது . இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 24, 2025
கடலூர்: கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்ல பெருமாள்(90). இவரது மனைவி அலமேலு (80). வயது மூப்பு காரணமாக செல்ல பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது இறுதி சடங்கு நடைபெற்ற போது, துக்கம் தாங்காமல் இருந்த அலமேலு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதி ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 24, 2025
கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்யும் அனைத்து வகையான படகு உரிமையாளர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை பதிவு செய்திட வேண்டும். படகு ஆய்வின் அறிக்கை, உயிர்காக்கும் கருவிகள் அடங்கிய விவரம், உரிமையாளரின் முகவரி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் 30.11.2025 மீன்வளத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


