News October 5, 2025
இருமல் சிரப் கொடுத்த டாக்டர் கைது

மத்தியபிரதேசத்தில் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால், ‘Coldref’, ‘Nextro’ சிரப்கள் தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மருந்துகளை பரிந்துரைத்த, டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், Coldref இருமல் சிரப்பை தயாரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் மருந்தகம் மீதும் அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
Similar News
News October 5, 2025
தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு GOOD NEWS

தங்கம் விக்குற விலைக்கு இனி அதை வாங்கவே முடியாது என நினைக்குறீங்களா? வெள்ளியை வாங்க ஆரம்பியுங்கள். தங்கத்தை போலவே வெள்ளியையும் தற்போது உலக நாடுகள் சேமிக்க தொடங்கிவிட்டதால் அதன் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதனால் இனி வெள்ளிதான் அடுத்த தங்கம் என்றும், வரும்காலத்தில் வெள்ளி முக்கியமான முதலீடாக மாறும் எனவும் நிபுணர்கள் சொல்றாங்க. இன்றைய தேதிக்கு 8 கிராம் வெள்ளியின் விலை ₹1,320-ஆக இருக்கிறது.
News October 5, 2025
இந்தியாவுக்கு வருகிறார் பிரிட்டன் பிரதமர்

2 நாட்கள் அரசுமுறை பயணமாக கெய்ர் ஸ்டார்மர் அக்.8-ம் தேதி இந்தியா வர உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து PM மோடியுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், PM மோடியுடன் சேர்ந்து, மும்பையில் நடைபெறும் 6வது Global Fintech Fest விழாவிலும் கலந்துகொண்டு அவர் உரையாற்றவுள்ளார்.
News October 5, 2025
விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்: டிடிவி

கரூர் கூட்ட நெரிசல் ஒரு விபத்துதான்; யார் மீதும் பழிபோட முடியாது என்று டிடிவி தெரிவித்துள்ளார். விஜய்யை கைது செய்ய கூட்டணி கட்சிகள் CM ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், அவரை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதனாலே இச்சம்பவத்தில் ஸ்டாலின் நிதானமாக செயல்படுகிறார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்; அது குற்றத்தை ஏற்பது ஆகாது என்றார்.