News March 1, 2025

சீமானுக்கு நேரும் அவமானத்தை கவனிக்க வேண்டுமா?

image

நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கில் சீமான் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், 15 ஆண்டுகளாக இதே வழக்கில் அனைவரும் தன்னை கற்பழித்து வருவதாக ஆதங்கமாகப் பேசினார். இதனால், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்படும் அவமானம் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை என்றும் அவர் கூறினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது வாதம் சரியானதா? கமெண்ட்டில் சொல்லுங்க.

Similar News

News March 1, 2025

+2 பொதுத் தேர்விற்கு தயாராகும் பள்ளிகள்!

image

தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி (திங்கட்கிழமை) +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மேஜைகள் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்குவது, பதிவு எண் எழுதும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதனிடையே மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.

News March 1, 2025

உங்களிடம் ₹100, ₹200, ₹500 நோட்டு இருந்தா இதை பாருங்க

image

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண, இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் ₹100, ₹200, ₹500 நோட்டுகளில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எ.கா: ₹100 தாளில் அதன் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். ₹200ல் 4 வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.

News March 1, 2025

அட இது தெரியாம போச்சே! தினமும் 15 நிமிடம் போதும்

image

செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால், நம் மனநிலையை பாதிக்கக்கூடிய, ஆறு நரம்பியல் கடத்திகள் சமநிலை அடைவதாக அரசு உதவி கால்நடை டாக்டர் மெரில்ராஜ் கூறியுள்ளார். ‘Animal Assisted Therapy’ முறையை சுட்டிக்காட்டும் அவர், வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால் போதும், ரத்த அழுத்தம் இயல்பாவதோடு, மன அழுத்தம், சோர்வு, கவலை, பயம், பதற்றம் குறையும் என்கிறார்.

error: Content is protected !!