News March 24, 2025
அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News December 1, 2025
One last time.. ஹேப்பி டிசம்பர்!

ஆண்டின் கடைசி மாதம் வந்தாச்சு. இந்த 11 மாதம் உங்களின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பாருங்கள். நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். என்ன தவறிழைத்தீர்கள், எதில் முன்னேற்றம் காண வேண்டும் என கவனியுங்கள். ஒரு வருடம் வீணாகிவிட்டதே என வருந்த வேண்டாம். 2025-ன் கடைசி பக்கத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முடிவெடுங்கள்.. செயலில் இறங்குங்கள். ஹேப்பி டிசம்பர்!
News December 1, 2025
பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தவெக: உதயநிதி

செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரு கட்சியின் வேறு ஒரு கிளைக்கு தாவியுள்ளார் என உதயநிதி விமர்சித்துள்ளார். இதனால், தவெக ஒரு சுதந்திரமான கட்சி இல்லை என்ற அவர், பாஜகவின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அமித்ஷாவின் ஆலோசனைப்படியே செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
போட்டோவை காணிக்கையாக கேட்கும் அம்மன்!

பொங்கல் வைப்பது, முடி, பண காணிக்கை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பல கோயில்கள் உள்ளன. ஆனால், வேலூர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் முற்றிலும் மாறுபட்டதாகும். எந்த வேண்டுதல் ஆயினும் அது நிறைவேறிய பிறகு, தங்களது போட்டோவை காணிக்கையாக கோயிலில் மாட்டிவிட்டு செல்கின்றனர். அதே போல, இக்கோயிலில் பூசாரியும் இல்லை. அர்ச்சனை, அபிஷேகமும் நடப்பதில்லை.


