News March 23, 2025

இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

image

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவதால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது மிகவும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

Similar News

News December 1, 2025

சமந்தா கல்யாணத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா?

image

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஆகியோரின் திருமணம் ஈஷா மையத்தில் நடைபெற்றது. ‘பூதசுத்தி விவாஹா’ என்ற ஸ்பெஷலான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே ‘பூதசுத்தி விவாஹா’ முறை. இது இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

நாளை பள்ளிகள் 4 மாவட்டங்களில் விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை(டிச.2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18440636>>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்<<>> ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புடன் இருங்கள் மக்களே!

News December 1, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

image

கார்த்திகை திருநாளில்(டிச.3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் எழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். மலை உச்சியில் ஆய்வு செய்த ஜட்ஜ் G.R.சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!