News September 6, 2025
Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!
Similar News
News September 6, 2025
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகளும் தற்போது போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன்களை உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும். பெற்றோர் செய்வதை தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் *வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் *ஏதாவது கலை திறனில் அவர்களை ஈடுபடுத்துங்கள். SHARE IT.
News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் பேச்சு குறித்து EPS ஆலோசனை

தேனியில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் தங்கியுள்ள EPS, அதிமுக மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், KP முனுசாமி, SP வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், RB உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
News September 6, 2025
₹450 கோடி விவகாரம்.. சசிகலா மீண்டும் கைதாகிறாரா?

சசிகலாவுக்கு சொந்தமான பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் ₹450 கோடி நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ₹450 கோடி முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் கூறிய தகவலின்படி, பினாமி சொத்து வழக்கின் கீழ் சசிகலாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்த CBI கடந்த மாதம் சென்னை, திருச்சி, தென்காசியில் சோதனை நடத்தியிருந்தது.