News February 16, 2025
இந்த உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடுகிறீர்களா?

இரவு சமைத்த உணவு மீதம் இருந்தால், அதனை சுடவைத்து மீண்டும் சாப்பிடும் வழக்கம் நம் வீடுகளில் அதிகம். ஆனால் சில உணவுகளை இவ்வாறு சுடவைத்து சாப்பிடும் போது, அதில், நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, கடல்சார் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு, fried rice போன்றவற்றை நிச்சயமாக சுடவைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News October 25, 2025
நகைக் கடன்.. HAPPY NEWS

தங்க நகைக் கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு RBI பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் உள்ளது. இதனால், குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகைக் கடன் பாதுகாப்பானது என்பதால், கிராமப் புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக் கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன.
News October 25, 2025
திருமாவால் இதற்கு பதில் கூற முடியுமா? நயினார்

அதிமுக – பாஜக கூட்டணியை விரும்பத்தகாதது என திருமாவளவன் விமர்சித்திருந்த நிலையில், NDA கூட்டணி என்பது இயற்கையானது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சமூக நீதி பேசும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள திருமா, வேங்கைவயல் பிரச்னை என்ன ஆனது என்பதற்கு பதில் கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். பதில் கூற முடியவில்லை என்றால், திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர வேண்டியது தானே என்றும் சாடியுள்ளார்.
News October 25, 2025
பழங்களை மட்டும் உணவாக சாப்பிடலாமா?

இன்றைய சூழலில் பல Diet முறைகள் வந்துள்ளன. அதில் ஒன்று Fruit Diet. நாள் முழுவதும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால் அவ்வாறு சாப்பிடக்கூடாது என்கின்றனர் டாக்டர்கள். பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துகளை வழங்கும். ஆனால், புரதம், கொழுப்புகள் இல்லாததால், உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்காது. எனவே பழங்களுடன் தானியங்கள், நட்ஸ், முட்டை உள்ளிட்ட உணவுகளையும் சேர்க்க வேண்டும் என்பதே டாக்டர்களின் அட்வைஸ்.


