News February 16, 2025

இந்த உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடுகிறீர்களா?

image

இரவு சமைத்த உணவு மீதம் இருந்தால், அதனை சுடவைத்து மீண்டும் சாப்பிடும் வழக்கம் நம் வீடுகளில் அதிகம். ஆனால் சில உணவுகளை இவ்வாறு சுடவைத்து சாப்பிடும் போது, அதில், நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, கடல்சார் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு, fried rice போன்றவற்றை நிச்சயமாக சுடவைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

Similar News

News November 27, 2025

சட்டையில் ஜெ., படம்: தோளில் TVK துண்டு

image

செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த போது, விஜய் அவருக்கு TVK துண்டு போட்டார். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது ஆச்சர்யத்துடன், கேள்வியையும் எழுப்பியது. இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், ‘இது ஜனநாயக நாடு; யாரோட புகைப்படத்தை வேண்டுமானாலும் வச்சுக்கலாம்’ என்று தெரிவித்தார். கட்சி மாறினாலும், பாசம் இன்னும் போகவில்லை போல என பலர் இதுபற்றி கருத்து கூறி வருகின்றனர்.

News November 27, 2025

BREAKING: புயல் உருவானது.. பேய் மழை வெளுக்கும்

image

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக IMD அறிவித்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிட்வா புயல் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் <<18402600>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

பொங்கல் பரிசாக ₹5,000?… ரேஷன் கார்டுக்கு வழங்க திட்டம்

image

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு தலா ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பரிசுத் தொகை இல்லாமல், பொங்கல் பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!