News February 16, 2025

இந்த உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடுகிறீர்களா?

image

இரவு சமைத்த உணவு மீதம் இருந்தால், அதனை சுடவைத்து மீண்டும் சாப்பிடும் வழக்கம் நம் வீடுகளில் அதிகம். ஆனால் சில உணவுகளை இவ்வாறு சுடவைத்து சாப்பிடும் போது, அதில், நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, கடல்சார் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு, fried rice போன்றவற்றை நிச்சயமாக சுடவைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

Similar News

News January 5, 2026

பொங்கல் பரிசு தொகுப்பு.. CM ரங்கசாமி வழங்கினார்

image

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பருப்பு உள்பட தலா ₹750 மதிப்புள்ள பொருள்களை மக்களுக்கு வழங்கி, CM ரங்கசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. TN-ல் ₹3,000 ரொக்கத்துடன் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தை ஜன.8-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

News January 5, 2026

தவாகவில் இருந்து தவெகவுக்கு தாவுகிறார்!

image

தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீச பாண்டியன் தவெகவில் இணையவுள்ளார். நாதகவில் இருந்து வெளியேறி தவாகவில் இணைந்த இவர், சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தமிழ் தேசியம் பேசுவதால் சீமானை நண்பனாக கருதும் வேல்முருகனுக்கு இது பிடிக்காததால், விமர்சிக்க வேண்டாம் என ஜெகதீசனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

News January 5, 2026

KKR-க்காக ₹4,000 கோடி செலவழிக்கும் ஷாருக்!

image

KKR அணியை கிட்டத்தட்ட முழுமையாக கைப்பற்றும் எண்ணத்தில், ஷாருக்கான் சுமார் ₹4,000 கோடி செலவழிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. KKR அணி உரிமத்தில் தற்போது, ஷாருக்கிடம் 55% பங்குகளும், மெஹ்தா குரூப்பிடம் 45% பங்குகளும் உள்ளன. மெஹ்தா குரூப்பிடம் இருந்து 35% பங்குகளை சுமார் ₹4,000 கோடியை கொடுத்து ஷாருக்கான் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அணியின் உரிமத்தில் அவரின் பங்குகள் 90% ஆக அதிகரிக்கும்.

error: Content is protected !!