News April 22, 2025
ATM-ல் அடிக்கடி பணம் எடுப்பவரா? இத கவனியுங்க

வரும் மே 1-ம் தேதி முதல், ATM-ல் இருந்து பணம் எடுப்பதில் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி ATM இல்லாமல், வேறு வங்கியின் ATMல் பணம் எடுத்தால், மாதத்தின் முதல் 3 முறை மட்டும் இலவசம். 4-வது முறையில் இருந்து பணம் எடுப்பதற்கு ₹19 பிடித்தம் செய்யப்படும். அதேபோல, வங்கி கணக்கு வைத்திருக்கும் ATM-லேயே 5 முறை மட்டுமே இலவசம். 6-வது முறையில் இருந்து ₹23 பிடிக்கப்படும்.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூர்: கிணற்றில் கிடந்த சடலம்!

ஆதியூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கவுரவம்மாள்(70). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். அவரைப் பல்வேறு இடங்களில் அவர்களின் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், மட்றப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்த கவுரவம்மாளை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 30, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.
News December 30, 2025
பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.


