News April 14, 2025
அடிக்கடி அலாரம் வைப்பவாரா நீங்கள்.. இது முக்கியம்

பலரும் சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைக்கிறோம். ஆனால், அலாரம் அடித்தால் அதை ஆஃப் செய்து 10 நிமிடம் தூங்கி எழுந்திருக்கலாம் என மீண்டும் அலாரம் வைத்து தூங்குவோம். இதுபோன்று அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துமாம். தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் விழுத்துக்கொள்வதால் கண்கள் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாம். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் ஏற்படுமாம்.
Similar News
News December 17, 2025
திருவாரூர்: நீரில் மூழ்கி மீனவர் பலி!

முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவி(58). இவர் நேற்று வளவனாற்றின் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 17, 2025
BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறாரா செந்தில் பாலாஜி?

2021 தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் கரங்களை வலுப்படுத்த கோவை தெற்கில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியதால், அதை முறியடிப்பதற்காக திமுக இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
IPL ஏலம்: விலை போகாத தமிழக வீரர்கள்

IPL மினி ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏலப்பட்டியலில் ராஜ்குமார், துஷார் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து, அம்ப்ரிஷ் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை கூட எந்த அணியும் வாங்குவதற்கு முனைப்பு காட்டவில்லை. அஸ்வின் குறிப்பிட்டிருந்த சன்னி சந்துவின் பெயர் கூட ஏலத்தில் வாசிக்கப்படவில்லை. TN வீரர்களின் ஃபார்ம், திறனில் பிரச்னையா? என்ன காரணம்


