News April 14, 2025
அடிக்கடி அலாரம் வைப்பவாரா நீங்கள்.. இது முக்கியம்

பலரும் சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைக்கிறோம். ஆனால், அலாரம் அடித்தால் அதை ஆஃப் செய்து 10 நிமிடம் தூங்கி எழுந்திருக்கலாம் என மீண்டும் அலாரம் வைத்து தூங்குவோம். இதுபோன்று அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துமாம். தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் விழுத்துக்கொள்வதால் கண்கள் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாம். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் ஏற்படுமாம்.
Similar News
News January 16, 2026
₹1 கோடி லாட்டரி வென்றவர் கடத்தல்!

‘பேராசை பெரும் நஷ்டம்’ என்பதை உண்மையாக்கும் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கண்ணூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழ, பேராசையில் வரி ஏய்ப்பு செய்து அதிக பணத்தை பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக டிக்கெட்டை விற்க முயன்றுள்ளார். இதை பயன்படுத்திய கும்பல், அதிக பணம் தருவதாக அவரை காரில் ஏற்றிச் சென்று பரிசு டிக்கெட்டை பறித்து கொண்டு நடுரோட்டில் இறக்கிவிட்டுள்ளது. SO, NO பேராசை!
News January 16, 2026
₹4,000.. வந்தது மகிழ்ச்சியான செய்தி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 22-வது தவணை வரும் பிப்ரவரியில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் 21வது தவணைத் தொகையை பெறாத விவசாயிகளின் கணக்குகளில் அத்தொகையும் சேர்த்து மொத்தம் ₹4,000 வரவு வைக்கப்படும் என தகவல் வந்துள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் e-KYCஐ முடிக்க வேண்டும் எனவும், வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 16, 2026
ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: சச்சின் பைலட்

ஆட்சி அதிகாரத்தில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என்று சென்னையில் காங்., முக்கிய தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்று தனி வாக்கு சதவிகிதம் இருக்கிறது எனக்கூறிய அவர், பல கட்சிகள் கேட்பதுபோலத்தான், காங்., நிர்வாகிகளும் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர் என்றும், பாஜகவை எதிர்க்க இப்போது மட்டுமல்ல, எப்போதும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


