News October 9, 2025
அடிக்கடி திருமண கனவுகள் வருகிறதா?

➤சிங்கிள்ஸ்க்கு திருமண கனவு வந்தால், புதிய பயணம் தொடங்குமாம். ➤காதலி (அ) தோழியை மணம் செய்வதாக வந்தால், அவர்களுடன் உறவு வலுப்படும். ➤திருமணத்திற்கு பின் வேறொருவரை மணம் செய்வதாக வந்தால், அவரை அதிகம் நேசிக்கிறீர் என அர்த்தம். எனினும், அவரை விட்டு விலகுவது நல்லது. ➤நீங்களோ, மற்றவரோ திருமணத்திற்கு தயாராவதாக கனவு வந்தால், வருத்தம் (அ) பதட்டத்தை குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
Similar News
News October 9, 2025
உழவர் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த 15 லட்சம் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உழவர் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை எனவும் அன்புமணி சாடியுள்ளார்.
News October 9, 2025
உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
News October 9, 2025
CJI-ஐ தாக்க முயன்றவர் மீது வழக்கு பாய்ந்தது

CJI பி.ஆர்.கவாய்யை காலணி வீச தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பெங்களூருவில் Zero FIR பதியப்பட்டுள்ளது. அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவாத்சலா அளித்த புகாரின் அடிப்படையில், விதான் சவுதா போலீஸ் IPC 132, 133 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. அதில் உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ள நிலையில், வழக்கு டெல்லி திலக் மார்க் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.