News September 16, 2025
மழை பெய்தால் மரங்கள் விழுவது ஏன் தெரியுமா?

தொடர்ந்து மழைபெய்வதால் ஈரப்பதம் அதிகரித்து மண் தளர்வாகிறது. இதோடு, நிலத்தில் மழைநீர் தேங்குவதால், மரங்களால் ஆக்சிஜனை உள் இழுக்கமுடியாமல் அதன் வேர்கள் அழுகிப்போகும் நிலை ஏற்படுகிறதாம். இதனால் தான் பெரிய மரங்கள் கூட சின்ன சின்ன மழைக்கும் முறிந்து விழுகின்றன. ஆனால் எவ்வளவு மழைநீர் தேங்கினாலும் சில மரங்களின் வேர்கள் மட்டும் அழுகிப்போகாது என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
Similar News
News September 16, 2025
இறால் ஏற்றுமதி ₹25,000 கோடியளவில் பாதிப்பு

US-ன் 50% வரிவிதிப்பு இந்திய சந்தையை பெருமளவில் பாதித்துள்ளது. அந்த வகையில், ஆந்திராவின் கடல்சார் வணிகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறால் ஏற்றுமதிக்கான 50% ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ₹25,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதார தீர்வு காண வேண்டும் என்று, CM சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
News September 16, 2025
இதுபோன்ற பேச்சை பொன்முடி தவிர்த்திருக்கலாம்: HC

சைவ, வைணவ மதங்களை ஒப்பிட்டு, பெண்கள் பற்றி பொன்முடி அவதூறாக பேசியதை சென்னை HC தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தற்போது இந்த வழக்கை முடித்துவைத்துள்ள HC, பொறுப்பான பதவியிலிருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புகாரளித்தவர்களிடம் போலீஸார் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக தனிநபர் புகாரளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
News September 16, 2025
ஜோடியாக சுற்ற 8 இடங்கள்

இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஜோடியாக செல்ல சில ஊர்கள் உள்ளன. அதில் சிறந்த 8 இடங்களை மேலே போட்டோக்களாக வழங்கி இருக்கிறோம். அனைத்தையும் பாருங்க. உங்க பேவரைட் சுற்றுலா ஸ்பாட் எது? நீங்கள் உங்க ஜோடியுடன் செல்ல விரும்பும் ஊர் எது? கமெண்ட்ல சொல்லுங்க. இதை உங்கள் ஜோடிக்கு share செய்து எந்த ஊருக்கு போகலாம்னு கேளுங்க?