News April 1, 2025
இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து Fun செய்தனர். அப்போது முதல் ஏப்.1 உலக முட்டாள்கள் தினமானது.
Similar News
News August 27, 2025
தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்: கவாஸ்கர்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது குறித்து பல வெளிநாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்ததற்கு சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வெளிநாட்டினர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாகவும், இந்திய கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லாமல் வேண்டுமென்றே விவாதத்தை ஏற்படுத்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News August 27, 2025
50% வரியால் எந்தெந்த துறைக்கு பாதிப்பு.. அரசின் முடிவு என்ன?

USA-வின் புதிய வரி விதிப்பு நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, ஜவுளி, இறால், பர்னிச்சர், வைரம், வேளாண் உற்பத்தி, ஸ்டீல், காப்பர், லெதர் 50% வரி விதிப்பின் கீழ் வருகிறது. இத்துறைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், டிரம்ப் கடைசி நேரத்தில் வரி விதிப்பை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
News August 27, 2025
ஹீரோக்கள் பட தயாரிப்பில் இறங்க வேண்டும்: SK

தனக்கு நடிப்பதில் விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் பேசிய அவர், பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திறமைசாலிகளுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், அது அம்மா போன்றதொரு உணர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது ஒரு படத்தை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.