News August 30, 2024

சிவக்குமார் ஏன் நடிப்பதை நிறுத்தினார் தெரியுமா?

image

சீரியலில் ஒரு காட்சியை கஷ்டப்பட்டு நடித்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். உயிரை கொடுத்து நடிக்கும் போது சிரித்து பேசலாமா என கேட்டபோது, ”எப்படியும் டப்பிங் தான பேச போறீங்க” என அலட்சியமாக கூறியதால், நடிப்புக்கு மரியாதை இல்லை என நடிப்பில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.

Similar News

News July 8, 2025

திமுக கூட்டணியில் தேமுதிக?

image

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மாநிலங்களவை எம்.பி பதவியை அதிமுக தராததால் அதிருப்தியில் தேமுதிக இருப்பதாகவும், ஆகையால் கட்சியின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் இடம்பெற பேச்சுகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ளன. அதேசமயம் 5 சட்டமன்ற தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், அதனை தருவதற்கு திமுக தலைமையும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

News July 8, 2025

டிமான்டி காலனி 3ம் பாகம் படப்பிடிப்பு துவக்கம்

image

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவான டிமான்டி காலனி 1 மற்றும் 2 பாகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில், படப்பிடிப்பும் பூஜை விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

News July 8, 2025

’₹8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்’

image

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்., இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் PM மோடி தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ₹8,000 கோடிக்கு சுற்றுப்பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!