News March 11, 2025
இந்தியாவில் முதலில் ஆதார் கார்டு பெற்றது யார் தெரியுமா?

நாட்டில் முதல் ஆதார் கார்டு யாருக்கு வழங்கப்பட்டது என யோசித்தது உண்டா? நாட்டின் முதல் ஆதார் கார்டு 2010ல் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று ரஞ்சனா சோனாவனே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் மகாராஷ்டிராவின் நந்துபார் மாவட்டத்தில் உள்ள தம்பாலி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். சோனியா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அவருக்கு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டது. SHARE IT.
Similar News
News July 9, 2025
அபார்ட்மென்டில் அழுகிய நிலையில் கிடந்த நடிகை!

பாகிஸ்தான் பிரபல நடிகையும், மாடலுமான ஹுமாயிரா அஸ்கர்(32) கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஹுமாயிராவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ‘Jalaibee’, ‘Aik Tha Badsha’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹுமாயிரா நடித்துள்ளார். #RIP
News July 9, 2025
4 நாள்களுக்கு ஒரு தடவை தாடிக்கு டை அடித்தால்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னும் சில காலம் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விம்பிள்டன் போட்டியை காண வந்த அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு கோலி, 4 நாள்களுக்கு ஒரு முறை தாடிக்கு டை அடிக்க தொடங்கிவிட்டால், ஓய்வு பெற அதுவே சரியான டைம் என குறிப்பிட்டு, தான் 2 நாள்களுக்கு முன்னர் தான் டை அடித்ததாக கிண்டலாக பதிலளித்தார்.
News July 9, 2025
மருமகளுக்கு Get-out.. மகளுக்கு கட்-அவுட்டா?

செளமியாவை அரசியலுக்கு வரக்கூடாது என்று நானே கூறியதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய பாமக கூட்டத்தில் அவரது மூத்த மகள் காந்திமதியை மேடையேற்றி அழகு பார்த்தார் மருத்துவர். இதனால் மகளுக்கு ‘Ok’ மருமகளுக்கு ‘No’வா என்று கட்சியினரும், ‘இது வாரிசு அரசியல் இல்லையா’ என திமுகவினரும் கேட்கின்றனர். அதேநேரம், காந்திமதியின் மகன் முகுந்தனின் நுழைவே தந்தை – மகன் இடையே பிரச்னை உருவாக ஒரு காரணம்.