News August 3, 2024

உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

image

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.

Similar News

News September 18, 2025

டிராவிட்டை குறிவைக்கும் 3 IPL அணிகள்

image

கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ராகுல் டிராவிட் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சீசனுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் ராகுல் டிராவிட் இடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு மினி ஏலத்திற்கு முன்னர் வர வாய்ப்புள்ளது.

News September 18, 2025

தவெகவை வேரிலேயே கிள்ளி எறியணும்: வினோஜ் பி.செல்வம்

image

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எப்படியெல்லாம் வளர்ச்சியை தடுத்ததோ, அப்படி இப்போது தவெக செயல்படுவதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நக்சல்களின் மனநிலையில் தவெக என்ற கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை (தவெக) வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை உறுதியுடன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.

News September 18, 2025

கவினை ஆணவக்கொலையை குடும்பமே திட்டமிட்டது: CB-CID

image

கவின் ஆணவக்கொலையில் காதலியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் CB-CID தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கவினை சுர்ஜித் கொலை செய்தது தனது பெற்றோருக்கு தெரியாது என பெண் கூறியிருந்தார். ஆனால் தற்போது, சுபாஷினியின் காதல் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்பதால் கவினை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக CB-CID கூறியதால், பெண்ணின் தந்தை SI சரவணனின் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது.

error: Content is protected !!