News August 3, 2024
உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
Similar News
News August 23, 2025
பதவிபறிப்பு மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

2014 முதல் கடந்த ஜூலை மாதம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள், அமைச்சர்கள் மட்டுமே சொத்து குவிப்பு, ஊழல், மோசடி வழக்கில் கைதாகியுள்ளனர். இதில், TMC-5, AAP-4, ADMK-1, DMK-1, NCP-1 ஆகும். குறிப்பாக, TN-ல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 21 நாள்களும், செந்தில் பாலாஜி 1 வருடம், 3 மாதங்களும் சிறையில் இருந்துள்ளனர். இந்த மசோதா எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் செயல் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
News August 23, 2025
DREAM11 போயாச்சு… DREAM MONEY வந்தாச்சு!

ஆன்லைன் கேம் சட்டம் வந்ததால், டிரீம்11 உள்பட பணம் வைத்து விளையாடும் அனைத்து கேம்களையும் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டது. இந்நிலையில், ‘டிரீம் மணி’ என்ற ஆப் மூலம், தனிநபர் நிதிச் சேவை தொடங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் டிஜிட்டல் கோல்ட் திட்டத்தில் இணைந்து ₹10 இருந்தாலே, நீங்கள் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். அதேபோல், வங்கிக்கணக்கு இல்லாமலே ₹1,000 டெபாசிட்டுடன் FD தொடங்கலாம்.
News August 23, 2025
செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆக.26-ல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போதுவரை இந்த திட்டத்தில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இனி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு அரசு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.