News March 24, 2025

இந்தியாவின் உயரமான கட்டடம் எது தெரியுமா?

image

உலகின் உயரமான கட்டடம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு துபாய் புர்ஜ் கலிஃபா என்று சொல்லி விடுவோம். அதன் உயரம் 2,717 அடி. இந்தியாவின் உயரமான கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா? மும்பை பலாய்ஸ் ராயல் டவர்தான் அது. 2018ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 1,050 அடி உயரத்தில் 88 தளங்களை கொண்டதாகும். இந்த பில்டிங் மேல இருந்து இன்னைக்கு குதிச்சா, நாளைக்குத்தான் கீழ வந்து சேருவோம் போல!

Similar News

News March 26, 2025

மீனவர் பிரச்னை: வவுனியாவில் பேச்சுவார்த்தை

image

இந்திய – இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியாவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. வரும் 5 ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வவுனியாவில் தொடங்கியுள்ளது.

News March 26, 2025

மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள்!

image

மாரடைப்பால் உயிரிழப்பு நிகழ்வது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் திரைத்துறையில் இந்த சோகம் தொடர்கிறது. கொரோனாவுக்குப் பின் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின் நடிகர்கள் விவேக், டேனியல் பாலாஜி, மாரிமுத்து, மயில்சாமி, டாக்டர் சேது, பாடகர் கே.கே, தற்போது மனோஜ் என தொடர்கதையாகி வருகிறது.

News March 26, 2025

அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு: SC கடும் அதிருப்தி

image

பெண்ணின் மார்பகத்தை பிடித்தாலோ, ஆடையை கிழித்தாலோ ‘ரேப்பாக’ கருத முடியாது என அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. குற்றத்தின் தீவிரத்தை உணராமல் நீதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்வது வேதனை தருகிறது. உ.பி, மத்திய அரசுகள் உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!