News October 3, 2025
நிலத்திலும் வாழும் மீன் எது தெரியுமா?

மட்ஸ்கிப்பர்கள் மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை. இவை தனது Gills-களில் தண்ணீரை சேமித்து வைப்பதால், நிலத்தில் வாழும்போது தனது தோல், வாய் மூலம் சுவாசிக்க இதற்கு ஏதுவாக இருக்கிறது. இதன் உடல் அமைப்பு, நிலத்தில் ஊர்ந்து செல்லவும், தாவவும் உதவுகிறது. எனவே இந்த மீன்களால் நிலத்தில் 3 நாள்கள் முதல் பல வாரங்கள் வரை வாழும் என்கின்றனர். இந்த அதிசயத்தை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 3, 2025
மிருதுவான சப்பாத்தி ருசிக்க இதை பண்ணுங்க

சப்பாத்தியில் நிறைய நார்ச்சத்து இருந்தாலும், அது கடினமாகி விடுவதால் சாப்பிடுவதற்கு தயங்குகிறோம். சப்பாத்தி சாஃப்டாக, மிருதுவாக சுட விரும்பினால் சில குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க. *வெதுவெதுப்பான நீரில் மாவை பிசையவும். *எண்ணெய்க்கு பதில் மாவில் சூடுபடுத்திய நெய் பயன்படுத்தவும். *துணி போட்டு மாவை மூடுங்கள். *மாவில் தயிர் சேர்த்து சப்பாத்தி சுட்டால் மென்மையாக வரும். *கோதுமை மாவை சலித்து பயன்படுத்தவும்.
News October 3, 2025
‘சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை’

தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மலையில் தாய் கண்முன்னே சிறுமியை ரேப் செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சாடினார். மேலும், தங்களை கொள்கை இல்லாத கூட்டணி என ஸ்டாலின் விமர்சிப்பதாக குறிப்பிட்ட EPS, திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
News October 3, 2025
35-45 வயதினரிடையே அதிகரிக்கும் இதய நோய்

இந்தியாவில் 35-45 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு, இதய நோய் பாதிப்பு 70% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 30,000 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு இதய நோய் ஏற்பட வேலைப்பளு, தொடர் மன அழுத்தம் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களில், 65% பேரின் தினசரி உடல் ரீதியான செயல்பாடு 30 நிமிடங்களுக்கும் குறைவு என தெரியவந்துள்ளது.