News October 20, 2025
கால்களால் உணவை சுவைக்கும் உயிரினம் எது தெரியுமா?

பலருக்கும் பிடித்த பட்டாம்பூச்சிகள் கால்களால் தான் உணவை சுவைக்கின்றன. பட்டாம்பூச்சிகளுக்கு கால்களில்தான் சுவை மொட்டுகள் உள்ளது. எனவே, அவை பூக்கள் (அ) பிற தாவரங்கள் மீது உட்காரும்போது கால்களை பயன்படுத்தி, உணவின் சுவையையும், ஊட்டச்சத்துகளையும் சுவைக்கிறது. இதன்பிறகுதான், தன்னுடைய நாக்கை பயன்படுத்தி உணவை உறிஞ்சி சாப்பிடுகின்றன. இயற்கையின் இந்த அற்புதத்தை அனைவரும் அறிய SHARE பண்ணுங்க.
Similar News
News October 20, 2025
ஜனாதிபதியுடன் PM மோடி சந்திப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவை PM மோடி சந்தித்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனையும் PM மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
News October 20, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்…

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்த 10, +12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளிநேரம் முடிந்த பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குபின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 20, 2025
ரயில் பயணத்தில் பிரச்னையா.. இந்த App உங்களுக்குத்தான்

உங்கள் ரயில் பயணத்தை பயமின்றி அனுபவிக்க ‘Railmadad’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இதில், கோச் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளை புகாராக பதிவு செய்யலாம். உங்களது லக்கேஜ் தொலைந்தாலோ, சக பயணிகளால் தொந்தரவு ஏற்பட்டாலோ, இதில் ரயில் எண், கோச் & சீட் எண்ணை பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.