News December 1, 2024
கேரம் விளையாட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா?

கேரம் போர்டு விளையாட்டைப் பற்றி தெரியாதவர்கள் வெகு சிலரே. இந்த விளையாட்டு இந்தியாவில்தான் பிறந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரச குடும்பங்கள் இந்த விளையாட்டை விளையாடினர். 1935ல் இந்தியாவும் இலங்கையும் இணைந்து முதல் கேரம் போட்டியை நடத்தின. 1988ல் சென்னையில் சர்வதேச கேரம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பாட்டியாலா அரண்மனையில் கண்ணாடியினால் ஆன கேரம் போர்டு இன்றும் உள்ளது.
Similar News
News April 29, 2025
IND மகளிர் அணிக்கு அபராதம் விதிப்பு

IND, SL, RSA பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. RSA-க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, ஏப்.27-ல் நடைபெற்ற SL-க்கு எதிரான ஆட்டத்தின்போது வெற்றி பெற்ற IND அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.
News April 29, 2025
செல்வத்தை கொடுக்கும் அட்சய திருதியை குபேர வழிபாடு!

காலை குளித்து, வீட்டில் இருக்கும் லட்சுமி நாராயணன், குபேரனின் படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகளை சாற்றுங்கள். ஒரு செம்பில் அரிசி, மஞ்சள், சிறிய நகைகளை வைத்து, அருகில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். தேங்காயை மாவிலை கலசம் தயார் செய்து அதன் முன், நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, விளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்யலாம்.