News August 26, 2025
நாளை நிலவை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகமாக உள்ளது. அப்படி சந்திரனை பார்த்தால் பொய்யான சாபம், திருட்டு குற்றச்சாட்டால் கறைபடுவார் என விநாயக பெருமான், சந்திரனை சபித்ததாக நாரத ரிஷி, கிருஷ்ணரிடம் கூறியதாகவும் நம்பப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மை இல்லை என்றபோதிலும் பலரும் கடைபிடிக்கின்றனர்.
Similar News
News March 4, 2026
முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?
News March 4, 2026
CINEMA 360: தள்ளிப்போன டாக்ஸிக் ரிலீஸ்!

யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. GCC நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக தள்ளிவக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் *MR ராதாவிற்கு ‘ரத்தக்கண்ணீர்’, ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ என நடிகர் சிவகுமார் புகழ்ந்துள்ளார் *’வா வாத்தியார்’ படம் ஏற்படுத்திய நஷ்டத்தால், தனது க்ரீன் சினிமாஸ் தியேட்டரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விற்று விட்டாராம்
News March 4, 2026
போர் பதற்றம்: இந்தியர்களுக்கு உதவ கண்ட்ரோல் ரூம்

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் பிரத்யேக கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த மையம் காலை 9 – இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இலவச எண்கள் மற்றும் இந்திய தூதரகங்களின் எண்கள் மேலே போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது.


