News March 15, 2025

குழந்தையை கைவிடுவோருக்கு என்ன தண்டனை தெரியுமா?

image

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 வருட சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 16, 2025

இதென்ன சோதனை… டயரின்றி தரையிறங்கிய விமானம்!

image

பாகிஸ்தானில் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. லாகூர் விமான நிலையத்தில் சரியான முறையில் தரையிறங்கிய விமானத்தின் பின்பக்க சக்கரங்களில் ஒன்று மாயமாகி இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். நடுவானில் சக்கரம் கழன்று விழுந்ததா? அல்லது புறப்படும்போதே சக்கரம் இல்லாமல் இருந்ததா? என விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 16, 2025

WPL கோப்பையை வென்றது மும்பை

image

பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி WPL பட்டம் வென்றது. டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 ஆண்டு லீக் வரலாற்றில் 2வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. மும்பை நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிகி பிரசாத் (25*) போராடியும் பலன் கிடைக்கவில்லை. ஏற்கெனவே, 2023ல் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட கர்நாடக டிஜிபி

image

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடக டிஜிபி (போலீஸ் வீட்டுவசதி கட்டுமானத் துறை) ராமசந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். தங்கக் கடத்தலுக்கு ராமசந்திர ராவுக்கு இருக்கும் செல்வாக்கை நடிகை ரன்யா ராவ் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ராமசந்திர ராவுக்கு எதிராக விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

error: Content is protected !!