News March 18, 2025
தெரு நாயை கொன்றால் என்ன தண்டனை தெரியுமா?

தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.
Similar News
News September 21, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மழையும், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விழுப்புரம், நெல்லை, குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News September 21, 2025
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த மூலிகை தேநீர் குடிங்க!

கிராம்பு டீ குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுவாசக் கோளாறுகள் நீங்கும் என சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி, அதில் 2 அல்லது 3 கிராம்புகளைச் சேர்த்து கொதிக்க விடுங்கள் *இந்த தண்ணீர் ஒரு கப் அளவுக்கு வற்றி வரும் வரை கொதிக்க விடவும் *பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது நேரம் ஆற விடுங்கள் *ஆறியதும், சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம்.
News September 21, 2025
DMK- TVK இடையே தான் போட்டி: விஜய் சொல்வது உண்மையா?

2026-ல் DMK-TVK இடையே தான் போட்டி என்று விஜய் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். திரும்ப திரும்ப இதை சொல்வதன் மூலம், திமுகவுக்கு நிகரான சக்தியாக அவர் தன்னை காட்ட முயல்கிறார். அதேநேரம், விஜய்யின் பேச்சுகளுக்கு CM உள்பட, திமுகவினர் உடனடி வினையாற்றுகின்றனர். அப்படியானால், தவெகவை திமுக போட்டியாக நினைக்கிறதா? நிச்சயம் இல்லை. அதிமுகவை பலவீனமாக காட்டவே திமுக இந்த உத்தியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.