News March 18, 2025
தெரு நாயை கொன்றால் என்ன தண்டனை தெரியுமா?

தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.
Similar News
News March 19, 2025
ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
News March 19, 2025
மார்ச் 19: வரலாற்றில் இன்று!

*1915 – புளூட்டோவின் புகைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது.
*1944 – 2ஆம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின.
*1962 – அல்ஜீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1972 – இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
*1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். ஏப்ரல் 19இல் இறந்தார்.
News March 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.