News February 25, 2025
தினமும் மோடியின் டிபன் என்ன தெரியுமா?

ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவைதான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக மோடியே தற்போது பேசியிருக்கிறார்.
Similar News
News February 25, 2025
340 டாட் பால்… வங்கதேசம் மோசமான சாதனை

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 50 ஓவர்களுக்கு மேல் டாட் பால் விளையாடிய அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 340 பந்துகளில் (56.4 ஓவர்கள்) BAN வீரர்கள் ரன் எடுக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக 181 பந்துகளையும், இந்தியாவுக்கு எதிராக 159 பந்துகளையும் ரன் எடுக்காமல் விட்டுள்ளனர்.
News February 25, 2025
நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
News February 25, 2025
காதுக்குள் பூச்சி புகுந்தால் செய்ய வேண்டியவை…

▶காதுக்குள் பூச்சி புகுந்தால் இருட்டறைக்குள் சென்று மொபைல் லைட் அல்லது டார்ச் பயன்படுத்தி வெளிச்சம் காட்டினால், பூச்சிகள் ஒளியை கண்டவுடன் தாமாகவே வெளியே வந்துவிடும். ▶மிதமான சூட்டில் உள்ள நீரில் சிறிது உப்பு கலந்து காதுக்குள் சில துளிகள் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காததால், அவை விரைவில் வெளியேறிவிடும். ▶ இதில் பூச்சிகள் வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.