News August 5, 2025

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

image

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு திசை, கேது திசை நேரமாக இருந்தால் அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?

Similar News

News August 6, 2025

தூங்குவதற்கு முன் இதை செய்யுங்க!

image

பருவமழை காலத்தில் தூங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் அல்லது பானங்களை அருந்த வேண்டாம். அது சளி மற்றும் இருமல் பிரச்னையை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமாக இருந்தால், பூஞ்சை தொற்று ஏற்படலாம். அறை ஈரப்பதமாக இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நோய் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News August 6, 2025

தமிழகம் ஈர்த்த முதலீடுகள் என்ன? எல்.முருகன் கேள்வி

image

தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்த நிறுவனங்கள் தொழிற்சாலையை தொடங்கின என்பது பற்றி திமுக அரசு அறிவிக்க வேண்டுமென எல்.முருகன் தெரிவித்துள்ளார். அப்போதுதான் எந்தெந்த நிறுவனங்கள் வந்துள்ளன என்பதை மக்கள் அறியமுடியும் என்றார். இல்லையெனில் CM ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் அறிவிப்புகள் வெற்று விளம்பர அறிவிப்புகள் என்பது உறுதியாகும் என்றார்.

News August 6, 2025

ஆணவக் கொலை.. 8 வாரங்களில் விசாரிக்க உத்தரவு

image

கவின் ஆணவக்கொலை வழக்கை 8 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய CBCID-க்கு மதுரை HC உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க கோரி HC-யில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசு சார்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!