News June 1, 2024
ரயிலில் எவற்றை கொண்டு செல்ல தடை தெரியுமா?

ரயில் பயணிகள் பாதுகாப்பு கருதி ரசாயன பொருள், பட்டாசு, கேஸ் சிலிண்டர், ஆசிட், எண்ணெய், கிரீஸ், நெய், தோள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல தடை உள்ளது. இவை தீப்பிடித்தாலோ, உடைந்தாலோ உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அவற்றை ரயில் பயணத்தில் எடுத்து செல்வோருக்கு ரயில்வே சட்டம் 164 பிரிவின்கீழ் ரூ.1,000 அபராதம், 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
Similar News
News September 19, 2025
திமுக கூட்டணியில் உருவான சலசலப்பு!

2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு, ஆட்சியிலும் பங்கெடுப்போம் என KS அழகிரி கூறிய கருத்து DMK கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தனித்து நின்றால் வெற்றி பெறாது என எதிரணியினர் கடுமையாக சாடி வருகின்றனர். முன்னதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும், அறிவாலயம் அமைதி காத்து வருகிறது. உங்கள் கருத்து?
News September 19, 2025
MP-க்கள் நிதியை ₹10 கோடியாக உயர்த்துக: CM ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூடத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ₹13,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும், விவசாயிகளுக்கு நிதியுதவிகளை சேர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், எம்.பி தொகுதி நிதியை ₹10 கோடியாக உயர்த்தவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
News September 19, 2025
முற்றிலும் டிஜிட்டலுக்கு மாறும் நிலப்பதிவு முறை

கிராம, நகர்புற பகுதிகளில் நிலங்களுக்கான உரிமைகளை தெளிவாக வரையறுக்கும் வகையில் புதிய மின்னணு தரவு தளத்தை மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. குறிப்பிட்ட நிலம் தொடர்பான A – Z தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த தளம் அமைக்கப்படுகிறதாம். இதனால் நிலம் தொடர்பான பல சட்ட சிக்கல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 99.8% பதிவுகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாம்.