News March 17, 2024
நீண்ட நாட்கள் நடைபெற்ற வாக்குப்பதிவு அறிவோமா ?

1951-52ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 4 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதற்கு அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 44 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இது குறுகிய காலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு ஆகும்.
Similar News
News November 6, 2025
திமுக, தவெக இடையேதான் போட்டி: டிடிவி

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என TTV தெரிவித்துள்ளார். 2026-ல் DMK- TVK இடையேதான் போட்டி. ஆனால், அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது எனக் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் அடுத்த தேர்தலில் ADMK 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் EPS என்ற துரோக சக்தியை அமமுக வீழ்த்தும் எனவும் சூளுரைத்துள்ளார்.
News November 6, 2025
BREAKING: கட்சி பதவி பறிப்பு.. ஸ்டாலின் அதிரடி

சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
News November 6, 2025
அனைத்து கட்சி கூட்டத்திற்கு CM ஏன் வரவில்லை? ஜெயக்குமார்

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலியாக, கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கூட்டத்திற்கு CM, DCM ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


