News April 5, 2025
ராணி சோப்பு தெரியுமா?

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!
Similar News
News October 17, 2025
எப்படி இருக்கிறது ‘டியூட்’.. ரசிகர்களின் ரிவ்யூ!

‘டியூட்’ படத்தின் முதல் காட்சியை வெளிமாநிலங்களில் பார்த்து முடித்த ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும், 2-ம் பாதி சுமார் என்றும் குறிப்பிடுகின்றனர். வழக்கம் போல, PR தனது மேனரிசத்தால் கவர்ந்துவிட்டாராம். மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பதாக கூறுகின்றனர். சாய் அபயங்கரின் இசை ஈர்த்ததாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
News October 17, 2025
BREAKING: விஜய் உடன் சந்திப்பு.. கண்ணீர் மல்க ஆறுதல்!

கரூர் வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த மதியழகன், பவுன்ராஜை விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எதையும் சமாளிப்போம், நான் இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை அவ்வப்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விரைவில் அவர்களை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, மதியழகனை கண்ணீர் மல்க கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
News October 17, 2025
புதிய அடிமைகளை வலைவீசி தேடும் பாஜக: உதயநிதி

பாஜகவுக்கு பழைய அடிமைகள் போதவில்லை என புதிய அடிமைகளை வலைவீசி தேடி வருவதாக உதயநிதி சாடியுள்ளார். சென்னையில் பேசிய அவர், வரும் தேர்தலிலும் சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். உதயநிதியின் பேச்சு, திமுகவினரை உத்வேகப்படுத்தினாலும், எதிர்க்கட்சிகளை அடிமைகள் என தொடர்ந்து அவர் விமர்சிப்பது அரசியல் களத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?