News April 5, 2025

ராணி சோப்பு தெரியுமா?

image

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!

Similar News

News August 13, 2025

ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

image

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 13, 2025

முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

image

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடி​தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

image

எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!