News April 5, 2025
ராணி சோப்பு தெரியுமா?

கச்சத்தீவு தேவாலய பெருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம் தமிழக மக்கள் மறக்காமல் வாங்கி வருவது என்ன தெரியுமா? ராணி சோப்பு தான். அதன் சந்தன நறுமணம் மக்களை ஈர்த்து வருகிறது. இலங்கையின் சுதேசி தயாரிப்பான ராணி சோப்பு 1941 முதல் சந்தைகளில் விற்பனையாகிறது. தரம், சருமத்தை பாதிக்காத தன்மையே வர்த்தக அளவில் வெற்றியடைய காரணம். அடுத்த முறை கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நேர்ந்தால் ராணியை மறந்துடாதீங்க!
Similar News
News December 7, 2025
கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
News December 7, 2025
புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் தங்களது ராசிக்கான பலன்களை ஆராயத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரபல ஜோதிடர் வீனஸ் பாலாஜி வரும் புத்தாண்டில் ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என கணித்துள்ளார். குறிப்பாக கன்னி ராசியின் 11-வது இடத்தில் குரு உச்சமடைய உள்ளதால் அதீத நன்மை என தெரிவித்துள்ளார். இதில் உங்கள் ராசி உள்ளதா?
News December 7, 2025
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு சென்று செலவு செய்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


