News October 5, 2025
ATM-க்கு 4 இலக்க பின் நம்பர் வந்தது எப்படி தெரியுமா?

மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் 1967-ல் ATM மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில், பாதுகாப்புக்காக 6 இலக்க PIN-ஐ அவர் பரிந்துரைத்தார். ஆனால், மக்கள் இதனை நியாபகம் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என அவர் பணியாற்றிய வங்கி கூறியிருக்கிறது. இதனால் தான் ATM PIN-க்காக 4 இலக்கங்களை பரிந்துரைத்தார். அதனையே தற்போது வரை உலக வங்கிகள் பின்பற்றி வருகிறது. SHARE.
Similar News
News October 5, 2025
மாத மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <
News October 5, 2025
பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

‘குறிஞ்சிசெல்வர்’ என போற்றப்படும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் காலமானார். ‘காட்டுக்குள்ளே இசைவிழா’ எனும் சிறுவர் நூலுக்கு 2012-ல் சாகித்ய அகாடமியின் புரஸ்கார் விருதை பெற்றவர். நாவல், சிறுகதை உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 5, 2025
பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள்: RN ரவி

நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும் படித்தவர்கள் அதிகம் கொண்ட தமிழகத்திலும் அது இருப்பது கவலை அளிப்பதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு போராடி வெல்லும் என CM ஸ்டாலின் சொல்வதாக குறிப்பிட்ட அவர், யாருடன் போராடுகிறது என தெரியவில்லை என்றார்.