News October 27, 2025
இந்த அதிசய மனிதர்களை பற்றி தெரியுமா?

உங்களால் இசையை சுவைக்கவோ, ஒரு நிறத்தை குறிப்பிட்ட ஓசையாக கேட்கவோ முடியுமா? உலகத்தில் உள்ள 5% மக்களுக்கு இந்த சூப்பர் பவர் இருக்கு. இதை சினஸ்தீசியா என்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு ஒரு இசையை கேட்கும்போது கேட்கும் திறன் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு அனைத்து திறன்களுமே தூண்டிவிடப்படுவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது. டெஸ்லா, மர்லின் மன்றோ போன்றவர்களுக்கு சினஸ்தீசியா இருந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News October 27, 2025
கொடிய விஷமுள்ள 8 பாம்புகள் இவைதான்!

மழைப்பொழிவைப் பெறும் அடர்ந்த காடுகளான அமேசான் காடுகளில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், குறிப்பாக ஆபத்தான மற்றும் கொடிய விஷமுள்ள பாம்புகள் சில உள்ளன. இந்த பாம்புகள், காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை என்னென்ன பாம்புகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. share பண்ணுங்க
News October 27, 2025
SIR-க்கு எதிராக திமுக கூட்டணி தீர்மானம்

CM ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில்<<18119925>> SIR-க்கு <<>>எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்ததை போல SIR என்ற பெயரில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குரிமையை பறிக்கும் சதியை அனுமதிக்க மாட்டோம் என்றும் திமுக கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும், 2026 தேர்தலை சீர்குலைக்கும் வேலையை EC தொடங்கியுள்ளதாகவும் திமுக கூட்டணி சாடியுள்ளது.
News October 27, 2025
புயல் அலர்ட்: 21 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

புயல் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை செங்கை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், குமரி, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகரில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், கவனம் மக்களே..!


