News March 23, 2025

கனவு தொல்லை இருக்கா? அப்போ இத செய்யுங்க..

image

மனிதன் நிம்மதியாக இருப்பதே தூக்கத்தில்தான். ஆனால் அந்த தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு கனவுகள் வருவது வழக்கம். மன அழுத்தம் மற்றும் கவலைகள், இரவில் அதிக கனவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கத்திற்கு முன் மொபைல் போன், டிவி பார்ப்பதாலும் கனவுகள் அதிகமாக வருமாம். யோகா, தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைந்து கனவு தொல்லை இருக்காதாம்.. உங்களுக்கு அடிக்கடி என்ன கனவு வரும்?

Similar News

News March 24, 2025

அப்பாடா.. ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டாங்க!

image

ஒருவழியாக கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? என்பதற்கு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பதில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, முட்டை ஓடு உருவாக OVOCLEIDIN 17 OC 17 என்ற புரதம் தேவை. இந்த புரதம் கோழியின் கருப்பையில் தான் உள்ளது. எனவே முதலில் கோழிதான் தோன்றி இருக்க வேண்டும்; அதன் பிறகே முட்டை வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

News March 24, 2025

குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு: அன்புமணி தாக்கு

image

மதுரையில் திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக அரசை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். கொலை குற்றங்களைத் தடுத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதாக சாடிய அவர், இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News March 24, 2025

50,000 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. தீவிரமடையும் போர்

image

ஹமாஸை அழிக்கும் வரை போர் நிறுத்தப் போவதில்லை என்ற வேகத்தில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2023 தொடங்கி தற்போது 50,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. 1.13 லட்சம் பேர் காயமடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!