News September 28, 2024
நாய் வளர்க்கிறீர்களா? தமிழக அரசு எச்சரிக்கை

நாய்கள் வளர்ப்பு, இனப்பெருக்கத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், *நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும் *இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் *வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல் போன்றவற்றை செய்யக்கூடாது * நாயின் தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது என ஆணையிட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

வெந்தய விதை தேநீர் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, கெட்ட கொழுப்பைக் குறைக்க, மாதவிடாய் வலியைப் போக்க உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் *வெந்தய விதைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. நண்பர்களுக்கு பகிரவும்.
News September 17, 2025
மோடி என்னும் புயல்!

எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலக அரங்கில் பெரும் தலைவராக உருவெடுத்துள்ள PM மோடிக்கு இன்று பிறந்தநாள். விமர்சனங்கள் இருப்பினும், தொடர்ந்து 3-வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்று தனிபெரும் ஆளுமையாக இருக்கிறார். நாட்டு வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றிலும் அவரின் ஆட்சியில் பலர் பலனடைந்து கொண்டுதான் இருக்கின்றனர். நீங்க PM மோடியின் ஆட்சியில் பயன்பெற்ற ஒரு திட்டத்தை குறிப்பிடுங்க?
News September 17, 2025
பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.