News February 10, 2025
உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739125999512_785-normal-WIFI.webp)
குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
Similar News
News February 10, 2025
பெற்றோர்களின் செக்ஸ் பற்றி கேள்வி: சர்ச்சையில் யூடியூபர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739187534967_347-normal-WIFI.webp)
India’s Got Latent நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாஹபடியா பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வாழ்நாள் முழுவதும் உன் பெற்றோர் உறவு கொள்வதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா? அல்லது நீ அதில் ஈடுபட்டு அந்த பழக்கத்தை நிறுத்தப் போகிறாயா?’ என்று கேட்டதுடன், போட்டியாளர்களிடம் ஆபாசமான கேள்விகள் கேட்டுள்ளார். இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோருகின்றனர்.
News February 10, 2025
திமுக அமைச்சர் ஜெயில் செல்வார்: அண்ணாமலை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736527535374_1204-normal-WIFI.webp)
2026ஆம் ஆண்டு தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் சிறைக்கு செல்லப் போகும் முதல் நபராக அமைச்சர் காந்தி இருப்பர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் அமைச்சர் காந்தி ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
News February 10, 2025
5 கிமீ போக 5 மணிநேரம்… திக்கித் திணறும் டிராபிக் ஜாம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739182289654_1231-normal-WIFI.webp)
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரக்யாராஜ் செல்கிறார்கள். இதனால், அந்நகரமே ஸ்தம்பித்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், பிரக்யாராஜ் சங்கம் ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும், சுமார் 300 கிலோ மீட்டருக்கு உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.