News April 27, 2025

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணி குடிக்குறீங்களா?

image

பிளாஸ்டிக் நம் வாழ்வின் அன்றாட பகுதியாகிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது, அதிலிருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக்கான Bisphenol A, Phthalates ரசாயனங்கள் உடலில் நுழைகின்றன. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். இனி கொஞ்சம் கவனமாக இருங்க!

Similar News

News April 28, 2025

3 ஆண்டுகள் சிறை.. பாக். குடிமக்களுக்கு எச்சரிக்கை!

image

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.

News April 28, 2025

சிறுநீரை குடித்து காயத்தில் இருந்து மீண்ட நடிகர்!

image

தனது சொந்த சிறுநீரை குடித்து முழங்கால் காயத்தில் இருந்து குணமானதாக பாலிவுட் நடிகர் பாரேஷ் ராவல் தெரிவித்துள்ளார். பட ஷூட்டிங்கின் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த இயக்குநர் வீரு தேவ்கன் தன்னை சந்தித்து, தினமும் எழுந்ததும் சிறுநீரை குடிக்கச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 15 நாள்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, டாக்டரை பார்க்கச் சென்றபோது, அவரே ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2025

பாஜகவிற்கு ஆதரவாக பேசிய சசிதரூர்.. காங். பதிலடி

image

J&K தீவிரவாத தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என காங். எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போரை முன்னுதாரணம் காட்டி, அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பக்கா பாஜககாரர் போல அவர் பேசுவதாக காங். பதிலடி கொடுத்துள்ளது.

error: Content is protected !!