News June 17, 2024
அதிகாலை நேரம் கனவு வருகிறதா? என்ன பலன்?

அதிகாலை நேர கனவுகள் பலிக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதில் இறந்தவர்களின் சடலமோ, துக்க நிகழ்ச்சியோ கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது என அர்த்தமாகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அசைவம் சாப்பிடுவது போல கனவு கண்டால் அதிர்ஷ்டம் வர போகிறது என அர்த்தம்.
Similar News
News April 4, 2026
மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: ஸ்டாலின்

CBSE-யில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, இந்தியை திணிக்கும் முயற்சி என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது, திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டில் அல்ல என சாடினார். மேலும், இந்தி திணிப்புக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 4, 2026
கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மரணம்.. அடுத்த துயரம்

பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது.
News April 4, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் மல்லுகட்டும் 3 எம்.பிக்கள்!

ஒருவழியாக அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் 3 முக்கிய தலைவர்கள் பேரவைத் தேர்தலிலும் களமிறங்குகின்றனர். அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் திருமாவளவன், மயிலம் தொகுதியில் அதிமுகவின் CV சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


