News January 6, 2025

சாமி கும்பிடும் பொழுது கண்ணீர் வருகிறதா?

image

கடவுளை நினைத்து மனமுருகி வேண்டும் போது, சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இது நல்ல சகுனம் தானே தவிர தவறில்லை. அதற்கு பெயர் தான் பக்தி. அதே நேரத்தில், உங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் கடவுளை வழிபட வேண்டுமே தவிர, எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என அழுது கொண்டே ஒருபொழுதும் பிரார்த்திக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Similar News

News September 15, 2025

இந்தியாவின் lucky charm ஷிவம் துபே

image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அரிதான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது துபே விளையாடிய 31 டி20 போட்டிகளில் தொடர்சியாக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தொடங்கிய இந்த வெற்றி, நேற்றைய பாகிஸ்தான் இடையேயான போட்டிவரை தொடர்ந்துள்ளது.

News September 15, 2025

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், SIR ரத்து செய்யப்படும்: SC

image

பிஹாரில் ECI-யால் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை(SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, SIR-ல் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முழு செயல்முறையும் ரத்து செய்யப்படும் என SC எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு பிற மாநிலங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து கோர்ட், விசாரணையை அக்., 7-க்கு ஒத்திவைத்தது.

News September 15, 2025

பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

image

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

error: Content is protected !!