News March 28, 2025
ஆன்லைனில் IPL டிக்கெட் வாங்குறீங்களா..

எப்படியாவது IPL போட்டியை நேரில் பார்க்கணும் என்ற ரசிகர்களின் ஆசையை சில விஷமிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண், இன்ஸ்டாவில் IPL டிக்கெட் விளம்பரத்தை பார்க்கிறார். பின் அவர்களை போனில் தொடர்பு கொள்ள, மெயில் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆனதாக கூறி, ₹12,000 கேட்கிறார்கள். யோசிக்காமல் ஆன்லைனில் பணத்தை அனுப்ப, பின்னரே ஏமாந்ததை அவர் உணர்ந்துள்ளார் . உஷாரா இருங்க!
Similar News
News March 31, 2025
BREAKING: திபெத்தில் நிலநடுக்கம்

திபெத்தில் அதிகாலை 3.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 170 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவாகியுள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 2,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்களால் பொதுமக்கள் நிம்மதியை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
News March 31, 2025
சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 50 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூரில் மனம் திருந்தி வாழ உள்ளதாக கூறி 50 நக்சல்ஸ் நேற்று சரணடைந்தனர். இதில் தேடப்படும் 14 முக்கிய நக்சலைட்டுகளும் அடக்கம். மொத்தமாக அவர்களின் தலைக்கு வெகுமதியாக ₹68 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களுடன் சரணடைந்தவர்களை வரவேற்பதாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
News March 31, 2025
வளர் பிறை போல் வாழ்க்கை ஒளிர வேண்டும்: இபிஎஸ்

இஸ்லாமியர்கள் மனமகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுவதாக இபிஎஸ் ரமலான் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.