News August 23, 2024
ராகுவின் வக்கிர பார்வை மறைய இதை செய்யுங்கள்!

சக்தி தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்பவர் துர்க்கை தேவி என்கிறது புராணம். கும்பகோணம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை பரமேஸ்வரியாக காட்சி தரும் அவருக்கு மாலை 4 முதல் 6 மணிக்குள் அபிஷேகம் & குங்கும அர்ச்சனை செய்து, சிவப்பு சேலை சாற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, பசு நெய் விளக்கேற்றி வழிபட்டால், ராகுவின் வக்கிர பார்வை மறைந்து, வாழ்வில் நல்லவை கைக்கூடும் என்பது ஐதீகம்.
Similar News
News December 7, 2025
கொடி நாள் நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

அனைத்து பகுதிகளிலும் முப்படை வீரர் கொடி நாள் இன்று 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தேனி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடி நாள் நிதிக்கு தனது நன்கொடையை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. நேரில் அஞ்சலி

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். J&K எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த சக்திவேலின் உடல் சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு <<18491316>>ராணுவ மரியாதையுடன் அடக்கம்<<>> செய்யப்பட்டது. அரக்கோணம் MP ஜெகத்ரட்சகன் சக்திவேலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சக்திவேலின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் ஆறுதல் கூறினர்.
News December 7, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் தருகிறது அரசு!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை வழங்குகிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற <


