News March 27, 2025
மரண வீட்டில் ஊடகங்கள் காசு பார்ப்பதா?

சினிமா பிரபலங்களின் வீட்டு துக்க நிகழ்வை, ஊடகங்கள் ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒருவரின் துயரை காசாக்க வேண்டுமா எனவும், ஒருவரின் மரணத்தை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமா எனவும் அந்த சங்கம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. மரண வீடுகள் என்பது துயரத்தை பகிர்ந்துகொள்ளவும், மௌனிக்கப்படவும் வேண்டிய இடம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 2, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருச்சியில் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க சாலை மற்றும் பொதுவெளி தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டமோ அல்லது சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுவதாக தெரிந்தால் உடனடியாக மாவட்ட காவல் அலுவலக உதவிஎண் 8939146100 (அ) அவசர உதவி எண் 100க்கு தகவல் தெரிவிக்க திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


