News June 11, 2024
வடக்கு திசையில் “தலை” வைத்து படுக்காதீங்க

ஆன்மிகத்தை பொறுத்தவரை வடக்கு திசையானது, இறை வழிபாட்டுக்குரிய திசையாகவே கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில்தான், குரு உபதேசம் பெற முடியும் என்பார்கள். ஈசனின் திருக்கயிலாயமும் வடக்கு புறத்தில்தான் அமைந்துள்ளது. அதனால்தான், வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது என்கிறார்கள். அதேபோல் வடக்கு திசை குபேரனுக்கு உரியது. இந்த திசையில் படுத்தால், செல்வமிழந்து வறுமை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
Similar News
News September 5, 2025
Beauty: கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.
News September 5, 2025
பள்ளிக் கல்வித்துறை பாழடைந்துவிட்டது: அன்புமணி

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் 24 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பணியிடங்களை நிரப்புவதில் அரசு அலட்சியம் காட்டுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
News September 5, 2025
சந்திர கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள்(செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 5 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். *ரிஷபம்: உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு. *மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். *சிம்மம்: தொழில் பார்ட்னருடன் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். *துலாம்: நிதிநிலை வீழ்ச்சி அடையும். சேமிப்பு குறையும். *கும்பம்: எதிர்பாராத செலவு, விபத்து ஏற்படலாம்.