News June 25, 2024
சொந்த பயன்பாடு கூடாது

அரசுப் பள்ளி கணினி ஆய்வகங்களை சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் உள்ளன. இதனை, ஆசிரியர்கள் சிலர் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து எச்சரித்துள்ள கல்வித்துறை, ஆய்வகங்களின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளது.
Similar News
News September 17, 2025
விழுப்புரத்தில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழியினை அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (17.09.2025) ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு திரு.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News September 17, 2025
மோடி தாயாரின் AI வீடியோவை நீக்க கோர்ட் உத்தரவு

PM மோடியை அவரது தாயார் திட்டுவது போன்ற AI வீடியோவை, பிஹார் காங்கிரஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் தாயாரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பாஜகவினர் பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த AI வீடியோவை உடனடியாக நீக்க காங்கிரஸுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News September 17, 2025
குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதுபோதும்

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி பூண்டு மிக நல்லதாம். நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இவற்றை குழந்தைக்கு சரியான முறையில் கொடுப்பதன் மூலம் பாதுகாப்பாக வளர்வார்கள். ஒரு வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இஞ்சியை தேவையான அளவு உணவில் கலந்து கொடுத்தால் செரிமானம் நன்றாக இருக்கும். SHARE IT.