News August 19, 2024
வங்கி அதிகாரிகளுக்கு கருணையே இல்லையா?

வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு, அரசு வழங்கிய நிவாரணத் தொகையில், கேரள கிராம வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் மாதத் தவணை பிடித்தம் செய்திருப்பது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கொடூரமான நடவடிக்கை என, அம்மாநில அமைச்சர் வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில அளவிலான வங்கி அதிகாரிகள் குழுவிடம் இது தொடர்பாக முறையிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 15, 2025
GOOD NEWS: எப்போதும் வாழாதவர்களாக இருக்காதீர்..

‘மனிதரிடம் நீங்கள் காணும் வியப்பான விஷயம் எது?’ என தலாய்லாமாவிடம் கேட்க,“பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை மறுத்து உடல்நலத்தை கெடுத்து கொள்கிறார்கள். சம்பாதித்தபின் உடல்நலனுக்கு செலவிடுகின்றனர். அதேபோல எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் நிகழ்காலத்தை அனுபவிக்க தவறுகிறார்கள்… இவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. எப்போதும் வாழாதவர்களாகவே இருந்து இறந்து போகிறார்கள்” என்றார்.
News August 15, 2025
CSK வீரருக்கு அடித்த ஜாக்பாட்: அஸ்வின்

CSK வீரர் Devald Brevis-க்கு கடந்த IPL சீசனில் ஜாக்பாட் அடித்ததாக, அந்த அணியின் ஸ்டார் பவுலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால், அதிக விலை கொடுத்து எடுத்ததாக கூறியுள்ளார். அவரது அடிப்படை விலை ₹75 லட்சமாக இருந்த நிலையில், ₹2.2 கோடி கொடுத்து CSK வாங்கியதாக தெரிவித்துள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக Brevis வந்தார்.