News October 25, 2025
புயலுக்கு முன் இதெல்லாம் பண்ணுங்க: சுகாதாரத்துறை

வரும் 27-ம் தேதி ‘மோன்தா’ புயல் உருவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க அறிவுறுத்தியுள்ளது. ஹாஸ்பிடலில் ஜெனரேட்டர்களை மேடான பகுதியில் வைக்கவும், மருந்துகளை தட்டுப்பாடு இல்லாமல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கர்ப்பிணிகளை முன்கூட்டியே ஹாஸ்பிடலில் அனுமதிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 25, 2025
டாஸ்மாக் 3 நாள்கள் இங்கு விடுமுறை.. மதுபிரியர்கள் ஷாக்

<<18100311>>ராமநாதபுரத்தை <<>>தொடர்ந்து சிவகங்கையிலும் அக்.27 முதல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.
News October 25, 2025
மேக்கப் போடுறீங்களா? கண்டிப்பா இத கவனிங்க

நீங்கள் போடும் மேக்கப்பை சரியாக கழுவவில்லை என்றால் அதுவே பல சரும பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். அதனை இயற்கையான முறையிலேயே அகற்ற பல வழிகள் இருக்கின்றன. மேக்கப்பை அகற்ற தேங்காய் எண்ணெய் அல்லது கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால், மென்மையான உங்கள் சருமத்தில் மேக்கப்பால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க முடியும். SHARE.
News October 25, 2025
டெல்லியில் NIGHT SHIFT-க்கு அனுமதி

டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணியில் வேலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் பெண்களுக்கான பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதி, கடைகளில் சிசிடிவி உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பணியிடங்களில் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கான வேலை நேரமும், ஊதியமும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


