News September 23, 2025

திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

image

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 23, 2025

கருண் நாயருக்கு பதில் தேவ்தத் படிக்கல்

image

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியை, BCCI நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கருண் நாயர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் மீண்டும் தேவ்தத் படிக்கல் இடம் பிடிப்பார் என தெரிகிறது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் விலகியுள்ளதால் துருவ் ஜூரேல் லெவனில் இடம் பிடிப்பார். மற்றொரு விக்கெட் கீப்பராக ஜெகதீஸ்சன் இணைய, வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை.

News September 23, 2025

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

image

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக, <<17788776>>பல்வேறு நாடுகள்<<>> அங்கீகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது பிரான்ஸும் இணைந்துள்ளது. ஐநா பொதுச்சபையில் இதை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 23, 2025

பகத் சிங் பொன்மொழிகள்

image

*தியாகம் என்பது ஒருபோதும் வீணாகாது
*அமைதி என்பது பலவீனத்தைக் குறிப்பதல்ல. அது வலிமையின் வெளிப்பாடு.
*உழைப்பின் மூலமாகவே ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும்.
*ஒற்றைக் குறிக்கோள் கொண்ட மக்கள், உலகை மாற்றியமைப்பார்கள்.
*ஒரு நபர் கொல்லப்படலாம், ஆனால் அவரது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

error: Content is protected !!